போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவை
பாடி பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை
(2x)
ஆனந்தமாய் அவரை நாடி
அல்லேலூயா பாட்டு பாடி
ஆராதனை செய்திடுவோம் இயேசுவை - ஆமென்
(2x)
1. புல்லுள்ள இடத்தில் மேய்ச்சல் தந்தார்
அமர்ந்த தண்ணீர் அண்டை கொண்டு விட்டார்
குறைவில்லாத வாழ்வை வாழ செய்தார்
யெகோவா ஈரே ஈரே என்றே பாடுவேன்.
(2x)
2. ஆத்துமாவில் ஆறுதலை தந்தார்
நீதியிலே வழிநடக்க செய்தார்
மரண இருளில் உடனிருந்து மீட்டார்
யெகோவா ராஃபா ராஃபா என்றே பாடுவேன்.
(2x)
3. கோலும் தடியும் கொண்டு தேற்றி வந்தார்
சத்துருக்கள் கண் முன் விருந்தளித்தார்
ராஜரீக அபிஷேகமும் தந்தார்
யெகோவா நிசி நிசி என்றே பாடுவேன்.
(2x)
4. பாத்திரத்தை நிரம்பி வழிய செய்தார்
நன்மை கிருபை தொடர்ந்துவர செய்தார்
பரலோகத்தின் நிச்சயத்தை தந்தார்
யெகோவா ரூவா ரூவா என்றே பாடுவேன்.
(2x)