Lyrics
கேட்டிடும் சத்தம் யாரது சத்தம்
ஆத்தும நேசரின் காலடிகள்
பகலினில் வெயிலில் இரவினில் நிலவில்
நாளெல்லாம் கேட்டது காலடிகள் - (2) - கேட்டிடும்
1. கதவைத் திறந்திட தாமதம் ஏனோ
திறந்திட்ட பொழுதினில் நேசரில்லை - (2)
வீதியில் ஓடினேன் தெருவெல்லாம் தேடினேன்
நேசரில்லை, காலடிகள் - கேட்டிடும்
2. நேசரின் கால்தடம் பின் செல்லலானேன்
சேர்ந்த இடம் அதோ கல்வாரியே! - (2)
பாவிக்கு மன்னிப்பு, ஜீவனும் தந்தது
கல்வாரியே! காலடிகள் - கேட்டிடும்
Credits
Produced by Bro.Emil Jebasingh