Lyrics
1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
பலகோடித் திரள்கூடிக் குகைதேடி வேகம் ஓடும்
விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
2. ஐந்துகண்டம் தனில்ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்டு கண்ணீர் சிந்தும்
தூயர்கூட்டம் சுத்தஉள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
நானும் ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் - அல்லே
3. கடல்குமுறும் கரைஉடையும் கப்பல்கவிழும் பெரும் நாசம்
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
வாக்குமாறா வேதம்கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் - அல்லே
Credits
Produced by Bro.Emil Jebasingh