Category: General
Total Songs: 24
தேவை நிறைந்தவர் Tamil - தமிழ்
பல்லவி
தேவை நிறைந்தவர் இயேசு தேவா
வல்லமை தந்திடுமே - (2)
அனுபல்லவி
தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை - (2)
வேளையில் தந்திடுமே - இந்த
வேளையில் தந்திடுமே . . . - (2)
சரணம்
1. நாடுகள் அனைத்திலும் அமைதியே இல்லை
வல்லமை தந்திடுமே - (2)
திறப்பின் வாசல் நின்று
களைப்பின்றி புலம்பபிட - (2)
எங்களை எழுப்பிடுமே - தேவா
வல்லமை தந்திடுமே . . . - (2) - தேவை
2. தேவை மிக்க ஒரு நாட்டினைத் தந்தீர்
வல்லமை தந்திடுமே - (2)
எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள் - (2)
‘கர்த்தரே தெய்வம்’ என்றே - காட்ட
வல்லமை தந்திடுமே . . . - (2) - தேவை
3. நித்திய நாட்டிற்கு
மக்களைச் சேர்க்க
வல்லமை தந்திடுமே - (2)
நிலையில்லா உலகில்
நிலைத்திடும் சேமிப்பு - (2)
ஆத்துமாக்கள் மட்டுமே - தேவா
வல்லமை தந்திடுமே . . . - (2) - தேவை
Produced by Emil Jebasingh
நாம் ஒருமித்து Tamil - தமிழ்
நாம் ஒருமித்து வாழ்வோம் என்றால்
நம் நடுவில் இயேசு நிற்பாரே - (2) - அப்போது
இருபதில் இருபதற்கு மேல் எப்படி
நம் நடுவில் இயேசு நிற்பதால் - எப்படி
நம் நடுவில் இயேசு நிற்பதால்
1. போட்டிகள் பொறாமைகள் கசப்புகள் சதிகள்
எதுவும் எங்கும் இல்லை
சிறியவன் பெரியவன் பதவிகள் அதிகாரம்
என்பது யாரிலும் இல்லை - (2)
பழைய மனுஷன் இல்லை நம்மில்
பாவ சுபாவமே இல்லை - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
2. கேபா, அப்பல்லோ, பவுல் என்ற
பிரிவினை நம்மில் இல்லை
அவர்கள் கூட்டம் இவர்கள் கூட்டம்
என்பார் யாருமே இல்லை - (2)
சபைகள் ஸ்தாபனம் இல்லை நம்மில்
வடக்கு தெற்கும் இல்லை - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
3. உயர்ந்த குலத்தோர் தாழ்ந்த குலத்தோர்
என்ற தத்துவம் இல்லை
இரண்டு டம்ளர் இரண்டு வரிசை என்ற
வித்தியாசம் இல்லை - (2)
அன்பின் வெள்ளம் உண்டு அவைகளை
அடித்துச் செல்லுதல் உண்டு - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
4. ஒருவர் கால்களை ஒருவர் கழுவும்
பணிவிடை ஆவியே உண்டு
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கும்
சேவை உள்ளமே உண்டு - (2)
தலைக்கணமே இல்லை நம்மில்
இடைவெளியே இல்லை - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
5. ஆவியின் வல்லமை அனைவர் தலையிலும்
வந்து இரங்குதல் உண்டு
அற்புதம் அடையாளம் ஆச்சரியம் அதிசயம்
சபையிலும் தளத்திலும் உண்டு - (2)
பேய்கள் ஓடுதல் உண்டு எங்கும்
விடுதலை ஆவியே உண்டு - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
6. ஏழு நதியிலும் இரவும் பகலும்
திரு முழுக்குகள் உண்டு
சீரும் சிறப்பும் பெற்று மகிழும்
பாரதம் ஓர்நாள் உண்டு - (2)
சட்டம் ஒழுங்கு உண்டு எங்கும்
நீதி நியாயமே உண்டு - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
Produced by Bro. Emil Jebasingh
நான் கைவிடமாட்டேன் Tamil - தமிழ்
நான் கைவிடமாட்டேன் உன்னை
என்னை நம்பியதால் - (3) - நான் கைவிடமாட்டேன்
Produced by Bro. Emil Jebasingh
பரிசுத்தர் கூட்டம் நடுவில் Tamil - தமிழ்
பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ - (2)
1. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே - (2)
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்யமாட்டீரோ - பரிசுத்தர்
2. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை - (2)
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் - பரிசுத்தர்
3. துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே - (2)
என் ஜீவன் எல்லை எங்கிலும்
பரிசுத்தம் என எழுதும் - பரிசுத்தர்
Produced By Bro. Emil Jebasingh
பார்போற்றும் Tamil - தமிழ்
பார்போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்
பூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார்
பரிசுத்தவான்களோடு இணைத்தார்
இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே
அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன்
ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்
ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்
அல்லேலூயா! அல்லேலூயா
2. பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே
பரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதே
உடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமே
இயேசுவின் சிலுவை அடிவாரமே! - அல்லேலூயா
3. தாழ்மை உள்ளம் கொண்டு பின்செல்வேன் நானே
கந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்
உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கலே
வல்ல தேவன் காட்டும் சுத்தக் கிருபையே! - அல்லேலூயா
4. நாள்தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்
விட்டு வந்த பாவக் கிடங்கிற்குச் செல்லேன்;
என் முன்னே அநேக சுத்தர் செல்கின்றார்
இப்பாதையே என்தன் ஜீவ பாதையே! - அல்லேலூயா
Produced by Bro. Emil Jebasingh
பொங்கிவரும் Tamil - தமிழ்
பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே - பொங்கி
1. தீயவர் திருடரும், கொடியவர் கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு
அழைக்கிறார் ஓடியே வா - பொங்கி
2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினை
பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ ஓடியே வா - பொங்கி
3. கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக்
கனிவுடன் வேண்டுகிறோம்
வருகையின் நாளினில் வருந்திடவேண்டாம் நீ
அழைக்கிறார் - ஓடியே வா - பொங்கி
Produced by Bro. Emil Jebasingh
பொல்லா உலகில் Tamil - தமிழ்
பொல்லா உலகில் நல்லோர் இல்லை
நீயோ மகனே அழைக்கப்பட்டாய்
சீக்கிரம் வருவேன் மறவாதே
நீயோ மகளே அழைக்கப்பட்டாய்
மற்றோரை ஆயத்தம் செய்
அதற்கே மகனே அழைக்கப்பட்டாய்
மற்றோரை ஆயத்தம் செய்
அதற்கே மகளே அழைக்கப்பட்டாய்
1. முந்தினோர் அநேகர் பிந்துகிறார்
நீயோ மகனே அழைக்கப்பட்டாய்
முடிவு பரியந்தம் போராட
நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை
2. அப்போஸ்தலர் என்ற வரிசையில்
நீயோ மகனே அழைக்கப்பட்டாய்
சுவிசேஷ பணியில் முன் நிற்க
நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை
3. தெபோராளின் கிராமங்கள் அதிகமே
நீயோ மகனே அழைக்கப்பட்டாய்
நினிவே பட்டணங்கள் பல உண்டே
நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை
4. உன்னால் இயன்றதை செய்து விடு
நீயோ மகனே அழைக்கப்பட்டாய்
உன்னுடன் நான் உண்டு முயன்றிடு
நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை
5. நாளை நாளை என்றோர் பெற்றதில்லை
நீயோ மகனே அழைக்கப்பட்டாய்
இன்றே இன்றே என்று கிரீடம் பெறு
நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை
Produced by Bro. Emil Jebasingh
மகிழ்வோம் மகிழ்வோம் Tamil - தமிழ்
மகிழ்வோம் மகிழ்வோம்
1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்
ஆ ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே - இந்த
2. சின்னஞ் சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார்
தூரம் போயினும் கண்டுகொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் - ஆ ஆ ஆனந்தமே
3. எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன் - ஆ ஆ ஆனந்தமே
4. அவர் வரும் நாளினில் எனைக் கரம் அசைத்து
அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன் - ஆ ஆ ஆனந்தமே
1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்
ஆ ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே - இந்த
2. சின்னஞ் சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார்
தூரம் போயினும் கண்டுகொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் - ஆ ஆ ஆனந்தமே
3. எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன் - ஆ ஆ ஆனந்தமே
4. அவர் வரும் நாளினில் எனைக் கரம் அசைத்து
அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன் - ஆ ஆ ஆனந்தமே
Produced by Bro. Emil Jebasingh
மந்தையில் சேரா Tamil - தமிழ்
மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்
1. காடுகளில், பல நாடுகளில்
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா? - (2)
பாடு பட்டேன் அதற்காகவுமே
தேடுவார் யார் என் ஆடுகளை ! - மந்தையில்
2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு - (2)
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் ! - மந்தையில்
3. எனக்காய் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திடக் கால்கள் வேண்டும் - (2)
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும் - மந்தையில்
Produced by Bro. Emil Jebasingh
மன்னிப்பு அருளும் மாபெரும் Tamil - தமிழ்
மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
உனதுள்ளம் சமுத்திரமோ - (2)
தண்டிக்க மறுத்த தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ? - என்னைத்
இது எங்கும் உண்டோ
இது எங்கும் உண்டோ
என்தன் சிந்தைக்கு மேலான
விந்தை அல்லோ? - என்னைத்
தண்டிக்க மறுத்தத் தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ...
2. கைகளும் கால்களும் செய்தவற்றை - அந்த
ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ - (2)
பல வலைகளில் சிக்கிய பாவி என்னை
இந்த வாதைகள் ஏற்றுநீர் மீட்டதேனோ - இது
3. பவுல் போன்ற தூயவர் செய்த வேலை - இந்தப்
பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ - (2)
உன்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
இந்தத் தரணியில் எம்மிடம் வைத்ததேனோ - இது
மாபெரும் அரசே
உனதுள்ளம் சமுத்திரமோ - (2)
தண்டிக்க மறுத்த தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ? - என்னைத்
இது எங்கும் உண்டோ
இது எங்கும் உண்டோ
என்தன் சிந்தைக்கு மேலான
விந்தை அல்லோ? - என்னைத்
தண்டிக்க மறுத்தத் தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ...
2. கைகளும் கால்களும் செய்தவற்றை - அந்த
ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ - (2)
பல வலைகளில் சிக்கிய பாவி என்னை
இந்த வாதைகள் ஏற்றுநீர் மீட்டதேனோ - இது
3. பவுல் போன்ற தூயவர் செய்த வேலை - இந்தப்
பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ - (2)
உன்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
இந்தத் தரணியில் எம்மிடம் வைத்ததேனோ - இது
Produced By Bro. Emil Jebasingh
மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் Tamil - தமிழ்
மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்
பரலோகம் தந்த ஒரே விசேஷம் - (2)
1. பாவ மன்னிப்புத் தரும் சுவிசேஷம்
கடவுள் பலியாக வந்த விசேஷம் - (2)
இயேசுவே அந்த நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் - மனிதர்
2. சுத்த இருதயம் தரும் சுவிசேஷம்
கடவுள் தொடர்பு வழங்கும் விசேஷம் - (2)
சுவைக்க சுவைக்க நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் - மனிதர்
3. பரலோக பாக்கியம் தரும் சுவிசேஷம்
மரணம் மங்களம் என்ற விசேஷம் - (2)
தருணம் இதுவே நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் - மனிதர்
Produced By Bro. Emil Jebasingh
மாசற்ற தூய நல் அன்பே Tamil - தமிழ்
மாசற்ற தூய நல் அன்பே அன்பே
மாறிடா மங்கிடா அன்பே அன்பே
காலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்த
உள்ளம் உடைக்கும் அன்பே! - (2) - மாசற்ற
1. எருசலேம் தெருக்களில் ஓலம் ஏன்?
கொல்கதா மலையில் கூட்டம் ஏன்?
என்னைத் திருத்திட என் அன்பு சாகுதே
ஓ நல்ல தேவ அன்பே! - (2) - மாசற்ற
2. சிலுவையின் அடியில் இரத்தக் கறை
என் உள்ளக் கறையை கழுவவோ!
ஏனையா இத்தனை என் மீது அக்கறை
ஓ நல்ல தேவ அன்பே! - (2) - மாசற்ற
3. நேசத்திற்கெதிராய் ஒன்றும் செய்யேன்
அன்பிற்கு அடிமை ஆகுகின்றேன்
என்யாவும் அன்பிற்கே; என்எல்லாம் அன்பிற்கே
உள்ளம் மகிழ்கின்றேனே - (2) - மாசற்ற
Produced By Bro. Emil Jebasingh
மாபெரும் அறுவடை Tamil - தமிழ்
மாபெரும் அறுவடை ஒன்று
கண் எதிர் தெரிகின்றது
காத்திருக்கும் சபை காட்சி பெறும் இயேசு
வீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும் - மாபெரும்
1. கோடிக்கோடியாக மக்கள் உண்டு
உடல், உள்ளம் இரண்டிலும் தேவைகொண்டு - (2)
ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு
பெரும் பாரதம்! பெரும் பாரதம்! - மாபெரும்
2. அன்பென்னும் சங்கிலி கைகள் கட்ட
சபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட - (2)
இயேசுவின் நாமம் உயர்த்தப்படும்
பெரும் பாரதம்! பெரும் பாரதம்! - மாபெரும்
3. உமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க!
உம் பணிக்காகக் கொடுத்திடும் மக்கள் வாழ்க! - (2)
அனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க!
பெரும் பாரதம்! பெரும் பாரதம்! - மாபெரும்
Produced BY Bro. Emil Jebasingh
யாருக்காய் வாழ்கிறாய் Tamil - தமிழ்
யாருக்காய் வாழ்கிறாய் நீ?
இந்த வையகம் தனிலே நீ
வாழ்ந்திடும் நாட்களெல்லாம்
யாருக்காய் வாழ்கிறாய் நீ?
1. மாமிச ஆசையில் சிக்கலுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
சிற்றின்பப் பிரியராய் வாழ்வாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர்
நாளெல்லாம் தீழ்ப்பான நோக்கம் கொண்டோர் - 2
இவர் வாழ்வெல்லாம் பாவமும் சாபமுமே - யாருக்காய்
2. பணம் பணம் என்றிடும் பலருமுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
மனமெல்லாம் செல்வத்தைச் சேர்த்திடவே
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர்
மூச்செல்லாம் ஆஸ்திக்காய் அலறி நிற்கும் - 2
ஆனால் வாழ்வெல்லாம் வறட்சியும் தாழ்ச்சியுமே - யாருக்காய்
3. கொள்கைக்காய் வாழ்பவர் பலருமுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
வீண் பெருமைக்கு விலையாகிப் போனார் உண்டு
இந்தப் புவியினிலே இந்தப் புவியினிலே - இவர்
நாளெல்லாம் விரிவில்லா மனதுடையோர் - 2
இவர் வாழ்வெல்லாம் சாதனை இழந்து நிற்போர் - யாருக்காய்
4. உடைபட்ட அப்பமாய் திகழ்வாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
கரைந்திடும் உப்பாய் நிற்பாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர்
நாளெல்லாம் இயேசுவுக்காய் மறைந்து நிற்பார் - 2
வெறும் கூப்பிடும் சத்தமாய் பணிபுரிவார் - யாருக்காய்
Produced By Bro. Emil Jebasingh
யாரும் காணவில்லையா? Tamil - தமிழ்
யாரும் காணவில்லையா?
யாரும் கேட்கவில்லையா?
எண்ண முடியா மனிதர்கள்
நித்தம் கடந்து செல்கின்றார்
எங்கே செல்கின்றார் - நீ சொல்
எங்கே செல்கின்றார்? - யாரும்
இரங்கும் ஐயா - இயேசுவே (3)
1. பசியும் பட்டினியுமாய்
போர்க்க எதுவும் இன்றியே
பார்க்க யாரும் இல்லாமல்
நித்தம் கடந்து செல்கின்றார் - எங்கே
2. ஜெபிப்போர் மறைந்து போனாரோ?
கொடுப்போர் குறைந்து போனாரோ?
உழைப்போர் சோர்ந்து போனாரோ?
நரகலோகம் நிரம்புதே! - எங்கே
3. என்னைத் தந்தேன் தந்தையே
உண்மை பாரம் இல்லையே
அர்ப்பணிக்க ஆசையே
சரணம் ஐயா இயேசுவே - எங்கே
Produced By Bro. Emil Jebasingh
வருக வருக ஆவியானவர் Tamil - தமிழ்
1. வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2)
தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே - இன்றே
தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே
புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே - தினமும்
புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே
வீடுதோறும் ஜெபிக்கும் மக்கள் எங்கள் தெருக்களிலே -(2)
பாத்திரர் தோன்றட்டும்
அற்புதம் நடக்கட்டும்
பிசாசுகள் ஓடட்டும்
கர்த்தரின் புஸ்தகம் நிரம்பட்டும்
வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2)
2. வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே -(2)
தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே - இன்றே
தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே
ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே - தினமும்
ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே
புதிய புதிய கிளைகள் விட்டு சபைகள் பெருகட்டுமே -(2)
அற்புதம் காணட்டும்
அதிசயம் தோன்றட்டும்
இயேசுவே மகிழட்டும்
அற்புதம் அதிசயம் இயேசுவே
வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே - (2)
3. வருக வருக ஆவியானவர் எங்கள் தேசத்திலே -(2)
தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே - இன்றே
தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே
பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே - தினமும்
பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே
இந்தியாவின் ஜனங்களெல்லாம் நித்திய ராஜ்யத்திலே -(2)
அற்புதம் காணட்டும்
அதிசயம் தோன்றட்டும்
இயேசுவே மகிழட்டும்
அற்புதம் அதிசயம் இயேசுவே
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் - (2)
ஆமென். . .
Produced BY Bro. Emil Jebasingh
வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் Tamil - தமிழ்
வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் அநாதி
கதவுகளே விலகியே நில்லுங்கள்
ஏன்?
இராஜா வருகிறார்,
யார்?
இயேசு ராஜா வருகிறார்
1. அலைகளெல்லாம் அவர்முன் அடங்கி நிற்கின்றது
உங்கள் தலைகளெல்லாம் அவர்முன் பணிந்து நிற்கட்டும் -(2)
குடைகளெல்லாம் அவர்முன் சுருட்டப்படட்டும் மனித
மகுடமெல்லாம் தரையில் குனிந்து வைக்கட்டும் - வாசல்களே
2. அவருக்கு ஆணையிட உலகில் மனிதர் இல்லை
அவருக்கு தடைவிதிக்க உலகில் நாவுகள் இல்லை -(2)
மனித பெருமையெல்லாம் ஒருநாள் மண்ணில் முடிவடையும்
பணியா தலைகளெல்லாம் ஒருநாள் தங்களைத் தான் அடிக்கும் - வாசல்களே
3. அவர் வரும்நாள் இன்னும் அதிக தூரம் இல்லை
அந்தோ உயிர்த்தெழும் நாள் மிகவும் சமீபமாயிற்றே -(2)
எரிநரகம் அல்லது என்றும் நித்தியம் மனிதர்
இறுதி பங்கு இதுவே தேவ சத்தியம் - வாசல்களே
Produced By Bro. Emil Jebasingh
வாலிப வாழ்வில் Tamil - தமிழ்
1.வாலிப வாழ்வில்
இயேசுவின் நிழலில்
பாவி நீ வந்திடுவாய்
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! - (2)
நிம்மதி, நிம்மதி, நிம்மதி - (2)
2.அழகும் மறைந்திடும்
பெலனும் ஒடுங்கிடும்
பணமெல்லாம் காலியாகும்
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! - (2)
நிம்மதி, நிம்மதி, நிம்மதி - (2)
3.உலகினில் தென்படும்
பலவகை அன்பெல்லாம்
இயேசுவைப் போல உண்டோ?
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! - (2)
நிம்மதி, நிம்மதி, நிம்மதி - (2)
Produced by Bro. Emil Jebasingh
வானை முட்டும் மரங்கள் Tamil - தமிழ்
1. வானை முட்டும் மரங்கள் மீது
சின்னப் பறவை அமர்ந்திருந்து
தேவன் மேல் ஓர் பாட்டுப்பாடி
என்னை நிற்கச் செய்தது
சிந்திக்கவும் வைத்தது
2. யானைகளின் கூட்டம் ஒன்று
ஓடை ஒன்றின் ஓரம் வந்து
நீளக்கையால் நீரை அள்ளி
மேலே நோக்கி வழங்கிற்று
‘நன்றி’ வழங்கிற்று
3. பறவைகளும் மிருகங்களும்
மறவாதும்மை துதிக்கும் நேரம்
பாவி நானும் பணிந்து வந்தேன்
சிலுவை மரத்தின் நிழலடியில்
‘இயேசுவே’ என்றேன்
4. எந்தன் சிருஷ்டி யாவற்றிலும்
மனிதர்தான் என் மனதில் பிரியம்
உன்னைத் தாழ்த்தி நீ வந்ததால்
என்னை உனக்குத் தருகிறேன்
‘எழுந்திரு’ என்றார்
5. உலகில் ஐந்து கண்டம் உண்டு
கோடிக் கோடி மனிதர் உண்டு
யாவருக்கும் என்னைக் கொடு
உன்னிடம் நானும் வருவேன்
‘போவாம் வா’ என்றார்
6. அன்று பிறந்த எங்கள் பணி
இன்று வரை தொடர்கின்றது
நானும் எந்தன் இயேசுவுடன்
எல்லா திக்கும் செல்கின்றேன்
எல்லோருக்கும் சொல்கின்றேன்
Produced By Bro. Emil Jebasingh
விதைப்பும் அறுப்புமே பூமியின் Tamil - தமிழ்
1. விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில்
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே
பல்லவி
சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே - இன்று
பிரதானம்
2. ஒன்று இரண்டென எத்தனை வருடங்கள்
கனவென கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு - சிந்திப்பீர்
3. நாடுகள் நடுவினில் வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து - சிந்திப்பீர்
4. ஆழக் கடல்களில் படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்
படகு உன் சாட்சியல்லோ? - சிந்திப்பீர்
Produced by Bro. Emil Jebasingh
.ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் Tamil - தமிழ்
1.ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் யாருண்டோ?
ஜீவனை அவர்க்காய் அளிக்க இங்கு யாருண்டோ?
ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே
ஜீவனை வெறுப்பவனோ பற்றிக்கொள்வானே - நம்மிலே ஜீவனுள்ள
2.மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?
ஜீவாதிபதி இயேசு தம் ஜீவன் கொடுத்ததால்
திருச்சபையும் அஸ்திபாரம் இட்டதெவ்வாறு?
பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் - நம்மிலே ஜீவனுள்ள
3.சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு?
ராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு?
ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால்
சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் - நம்மிலே ஜீவனுள்ள
4.பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்
உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பணும்
உலகத்தையும் மேன்மையையும் உதறித் தள்ளணும்
சிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் - நம்மிலே ஜீவனுள்ள
5.வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?
இரத்தத்தில் தம் அங்கிகளைத் தோய்த்து வெளுத்தவர்
ஜீவனை வெறுத்து, சிலுவையை எடுத்து
வெற்றிக் கீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் - நம்மிலே ஜீவனுள்ள
Produced by Bro. Emil Jebasingh
ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார் Tamil - தமிழ்
1. ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார் - (2)
2. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடனின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் - ஜீவிக்கிறார்
3. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே - ஜீவிக்கிறார்
Produced By Bro. Emil Jebasingh
ஜீவியமே ஒரே ஜீவியமே Tamil - தமிழ்
ஜீவியமே ஒரே ஜீவியமே
அண்ட சராசரம் அனைத்திலுமே
மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
பூமியில் வாழ்வது ஒரே தரமே - ஜீவியமே
1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்
இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்
இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் - 2 ஜீவியமே
2. எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
கதையைப்போல் மனிதரின் நாட்கள் செல்லும்
உலகத்துச் சேவை சாகையில் ஓயும்
உன்னுடன் மரித்தபின் வருவதாது?
கிறிஸ்துவின் சேவை நிலைத்து நிற்கும் - 2 ஜீவியமே
3. அர்ப்பணம் தந்தையே கைஅளித்தேன்
கல்வி செல்வம் சுகம் பொருள் அனைத்தும்
செல்லுவேன் சொல்லுவேன் இயேசுவே வழி என
வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்
என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன் - 2 ஜீவியமே
Produced by Bro. Emil Jebasingh
ஜெபித்துவிடு Tamil - தமிழ்
ஜெபித்துவிடு
யாபேஸ் போன்று
ஜெபித்துவிடு
வளர்ந்து விடு
விசுவாசத்தில் வளர்ந்துவிடு
அநேக ஜாதிகளை - நீ
சுதந்தரித்துவிடு - (2)
இயேசுவின் நாமத்தில்
இயேசுவின் நாமத்தில்
எல்லாம் கூடும் (2)
தாங்கிவிடு
மனப்பூர்வமாய்
தாங்கிவிடு
பெற்றுவிடு
பன்மடங்காய் பெற்றுவிடு
அநேக நன்மைகளை - உலகில்
பெற்று மகிழ்ந்துவிடு (2) - இயேசுவின் நாமத்தில்
வாழ்ந்துவிடு
சுவிசேஷம் சொல்ல
வாழ்ந்துவிடு
நின்றுவிடு
தெபொராள்போன்று
நின்றுவிடு
அநேக கிராமங்களை – நீ
சுதந்தரித்துவிடு (2) - இயேசுவின் நாமத்தில்
Produced By Bro. Emil Jebasingh